Heaven

......

Tuesday, December 6, 2011









முழுநிலவின்
முகம் பார்த்ததும்
என் முகவரி தொலைத்துவிட்டேன்,
ஆதலால்
இக் கவிதையின்
தலைப்பைத் தேடுகிறேன்....
இப்பொழுது என்னையும் தொலைத்து!

Tuesday, September 6, 2011

அவள்!

அழகின் இலக்கணமும்-பௌதீகமும்,
நறுமணத்தின் பிறப்பிடம்,
நானிலத்திலும் நானிருக்க விரும்பும் இடம்,
ஐம்பூதத்தால் ஆனா அழகுப் பிசாசு,
ஆயிராமாயிரம் சூரியனுகளுக்கு நடுவில் அழகுநிலா,
என் ஆண்மையின் அடையாளம்,
காதலின் அணிகலன்,
காமனின் காரியதரசி,
மன்மதனின் மனவாளினி,
சிரிப்பினில் புன்னகை,
சிணுங்களில் சித்திரம்,
கோவிலில் கர்பக்கிரகம்,
முத்தத்தின் முகவரி,
என் பொருட்சொல்லும்-எதிர்சொல்லும்!

Monday, August 22, 2011

பொண்ணு பார்த்துட்டாங்க

புரோகர் வந்து போட்டோ குடுத்துட்டு போனாரு ... பையன் பேரு சிபியாம் பெங்களூர்ல வேலை செயுறதா சொன்னாரு! அம்மம்மாக்கு தெரிஞ்ச குடும்பம்னு சொன்னாங்க அப்பா போட்டோ கொண்டுவது குடுத்து பாக்கச் சொன்னாரு.."பயன் நல்லா ஸ்மார்ட்டா இர்ருக்கான்ல மா?"... எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா வந்தது!

ரெண்டுநாளைக்கு அப்புறம் நானு அப்பா அம்மா எல்லோரும் கோவிலுக்குக் போயிட்டு இர்ருந்தப்போ ப்ரோகர் போன் பண்ணி பொண்ணு பார்க்க வர்றதா சொல்லவும் அப்பா என்கிட்டே திரும்பி என்னமா வரசொல்லிரலாமானு கேட்டாரு...கொஞ்சம் சந்தோசமாவும் நிறைய பயமாவும் இருந்தது...அப்புறம் அப்பாவே அவங்ககிட்டே "இப்போ கோயிலுக்குப் போயிட்டு இர்ருகோம் நாளைக்கு காலைலே வரச்சொல்லுங்களேன்" அப்புடீன்னு சொல்லிடாரு!

கோவிலுக்குப் போனதும் நான் சாமிகிட்டே வேண்டினது ஒண்ணுதான் வர்ரவருக்கு என்னைப் பிடிக்கணும்னு! அப்போ எனக்குத் தெரியலே அவனை எனக்கு பிடிச்சு இருந்தனால்தான் அப்புடி வேண்டுனேன்னு!

தம்பி பஸ் ஸ்டாப் வரைக்கும் போய் இருக்கான் அவங்களை கூபிட்டுடு வர்றதுக்கு...எனக்கு ஒரே பயமா இருந்தது !

என்னோட ரூம்ல இருந்துப் பார்த்தா வெளிய வர்றவங்க தெரியும்... தம்பி கூட அவன் எதோ பேசிட்டு நடந்து வந்துட்டு இர்ருந்தான்... கொஞ்சம் சுமார்தான்!ஆனாலும் பிடிச்சு இர்ருந்தது! ஒரே ஒரு வினாடி பார்த்துட்டு அம்மா கூபிட்டாங்கன்னு உள்ளே போயிட்டேன்!

அப்பா கூப்பிட்டு காபி குடுக்க சொன்னாரு... அவன் காபி எடுக்கும் போது "Thanks"- ன்னு சொன்னான்...எனக்கு சிரிப்பா வந்தது...

அப்புறம் நான் உள்ளே வந்துட்டேன்! ஆனா ஏன்டா அங்கே இர்ருந்து வந்தோம்ன்னு இர்ருந்தது! திரும்பவும் அப்பா கூபிடமாட்டாரானு இருந்துச்சு!

கொஞ்சம் கூட கூச்சமே படாம பொசுக்குனு உங்கப் பொண்ணு ரொம்பப் பிடிச்சு இர்ருக்குனு சொல்லிட்டான்!என்ன இன்னும் கொஞ்சம் நிறைய பேரைக் கூப்புட்டு வந்து இர்ருந்தா எல்லோருக்கும் காபி குடுக்க கொஞ்சம் நேரம் அதிகம் ஆகி இர்ருகும்னு சொன்னான்!

"சைந்தவி மா இங்கே வாடா இங்கே வந்து கொஞ்சம் உக்காருப்பா" அப்பாதான் கூபிட்டு அவருக்கு எதிரிலே உக்கார வச்சாரு...எனக்கு என்னமோ போல இர்ருந்துச்சு... அவனை நிமிந்துப் பாக்கவே முடியலே..என்னனமோ பேசிட்டு இர்ருந்தாங்க அப்பாவும் அவரும்... அப்பாவுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சுன்னு அவங்க நிச்சயதார்த்தம் கல்யாணம்னு பேசுரப்பவே புரிஞ்சுப் போச்சு... ஒரு மணிநேரத்துல எங்க வீட்டுல இர்ருந்த எல்லார் மனசையும் கொள்ளை அடிச்சிட்டுப் போய்ட்டான்!


அவங்க போனதுக்குப் அப்புறம் அப்பா அவரைப் பத்தியே பேசிட்டு இர்ருந்தாறு.எனக்குதான் ஒரு சந்தோசப் புயல் அடிச்சு ஒன்ஜமாதிரி இர்ருந்தது... உள்ளே ஓடிப் போய் அவன் போட்டோ எடுத்துப் பார்த்துகிட்டேன்..... பெரியப்பாவுக்குப் போன் பண்ணி வரச்சொன்னாங்க அன்னைக்கு ஈவ்னிங்கே எல்லோரும் கிளம்பி மாப்பிள்ளை வீடு பாக்கப் போய்ட்டாங்க! அப்பா அதுக்குள்ளே பெயர் பொருத்தமெல்லாம் பார்த்துட்டு வந்துட்டாரு...8 பொருத்தம் இர்ருகு பண்ணலாம்னு சொன்னதா சொன்னாரு... மீதி நாலு பொருத்தம் எங்கே போச்சுன்னு எனக்கு ஒரே கவலையா இருந்துச்சு!

தம்பிகிட்டே மூணு நாலுதடவை திரும்பத் திரும்பக் கேட்டானாம் உங்கக்காக்கு என்னை பிடிச்சு இர்ருக்கானு... தம்பி வீட்டுக்கு வந்து கிண்டல் அடிச்சான்! லூசு லூசு அதுக்கு அவன் என்கிட்டேயே நேரடியா கேட்டு இருக்கலாம்!

அடுத்த நாளு ஆடி மாசம்கரதால ஆவணி ஒன்னு நிச்சயம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க...எனக்கு கொஞ்சம் வருத்தமாவும் நிறைய சந்தோசமா இர்ருந்தது...அவன் பெங்களூரு போயிட்டதா அப்பா சொன்னாங்க!ஊருக்கு கிளம்புற அன்னைக்கு அப்பா மொபைலுக்கு மெஸ்சேஜ் பண்ணி இர்ருந்தான்!என்னமோ மிஸ் பண்ணுன மாதிரி இர்ருந்தது!


ஒரு 10-15 நாளுக்கு அப்புறம் அப்பா ஒரு sms அனுப்பி வச்சாரு நைட்டு மூணு மணிக்கு அப்பாவோட மொபைலுக்கு வந்ததா..."LOV U sainthavi- MIss U lot" னு...பொறுக்கி பொறுக்கி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அவரு மொபைலுக்கே அனுப்பி வச்சு இர்ருக்கான்!... பாவம் அவனுக்குதான் என்னோட நம்பர் தெரியாதேன்னு அப்புறமா தோனுச்சு சரின்னு அப்பா மொபைல்ல இர்ருந்து என்னோட நம்பர் அனுப்பி வச்சேன்!

"hello நாங்க ICICI bank -ல இர்ருந்து பேசுறோம் நீங்க கட்டவேண்டிய study loan balance இன்னும் கொஞ்சம் இர்ருக்கு எப்போ கட்டப் போறீங்க"

Thursday, May 19, 2011

After life -4

உன் வருகைக்கு முன்
சராசரியாய்
இருந்த என் உலகம்...
உன் வருகைக்குப் பின்
சராமாரியாய் மாறிப்போனது நிஜம்!

உன்னை யாரோ ஒருவரில்
ஒருத்தியாய்த்தான்
முதலில் பார்த்தேன்..
இப்பொழுது
என் உலகில் நீ
ஒருத்திமட்டுமே
உலவுவதை
ஒன்றும் செய்ய இயலாமல்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

நான் - நீ
என்று தனித் தனியாய்
உலவிய இருவரும்...
முழுநிலவு - பூமிக்கு
வெகு அருகாமையாய்
வந்துபோன நாளுக்குப் பின்
நீ - நான் - நாம்
என மாறிப்போனது
அதிசயம்!

இப்பொழுதெல்லாம்
என் சுவாசத்தின்
எண்ணிக்கையைக்காட்டிலும்...
நான் அதிகமாய்
எண்ணிப்பார்ப்பது ஒருநாளில்
எத்தனை முறை
உன் பெயரை சொல்லிக்கொள்கிறேன்
என்பதைத்தான்!

என்னை அடியோடு
மாற்றிவிட்டாய்!
அடியே...
என்னை
உன் அடிமையையும்
மாற்றிவிட்டாய்!

நேற்றுப் பெய்த
சிறு-மழைத்தூறலில்...
நீ நடந்து போகையில்
விட்டுப்போன உன்
பாதச்சுவடுகளை...
எடுத்துப்போக / இழுத்துப்போக
எறும்புக் கூட்டங்களுக்குள்
துவங்கிய இன்னுமொரு உலகயுத்தம்
என்று முடியுமோ என
ஐநா சபை கவலை கொண்டிருக்கிறது!


நான் உன்னை காதலிக்கத்
துவங்கியப்பின்
எமன் வருத்தப் பட ஆரம்பித்துவிட்டதாய்
சேதி!
இருக்காதா பின்னே?
அவன் வருகைப் பதிவேட்டில்
இனி என் பெயர் என்றும்
என்றென்றும்
பதிவேரப்போவதில்லையே!

காதல் அமிர்தமா - நஞ்சா
என்றறியேன்..
ஆனால் நீ
என்றென்றும் என்
சன்ஜீவிகை!

எமனோடு சண்டையிட்டு
சத்தியவானுயிர் மீட்டுவந்த
சாவித்திரியாய்...
காதலோடு போரிட்டு
உன்னை கவர்ந்து வந்தேன்...
இருக்காதா பின்னே நீதான்
காதலின்-தேவதை ஆயிற்றே!

உன்னை சந்தித்தப்பின்
என் வாக்காள அடையாள அட்டை
அவசியமில்லாமல் போனது
உனையன்றி இனி
வேறு யாருக்கு நான் ஓட்டளிக்கப் போகிறேன்!

உன் வருகைக்குப் பின்
என் விடியலும்,
அஸ்த்தமனமும்...
உனது G-Talk status -ஆல்
நிர்மாணிக்கப் படுகிறது!
உனது "online status" எனது
நாளின் விடியலின் சூர்யோதயம்...
உனது "offline status" எனது
நாளின் வெளிச்சத்தின் அஸ்த்தமனம்!

இப்பொழுதெல்லாம் நான்
கொஞ்சம் அழகாகிவிட்டேன்
என்று சொல்லும்
என் நண்பர்களிடத்தில்
எப்படிச்சொல்வேன்...
உன்னோட பேசுகையில்
என்னிலான சந்தோசத்தின் விளைவாய்
என் முகம் அதிகப்
பொலிவானதை!

உனக்காகத்தான் நான்
உயிர் வாழ்வதாய்
பொய் சொல்ல மாட்டேன்...
ஆனால் ஒன்று மட்டும்
நிச்சயம் தெரியும்
உனக்குப் பின் நான் நிச்சயமாய்
உயிர் வாழேன்!!

உன்னை உயிருக்கும் மேலாய் நேசிக்கிறேன்!
அதை தேவைப்பட்டால்
என்
உயிரைக் கொடுத்தும்
உறுதிப் படுத்துவேன் என்
உயிர்த்தோழியே!

சுத்தத் தங்கத்திற்க்குக் கூட
அதன்
தரம் அறிய உரை-கல் தேவைப்படலாம்..
என் காதல்
உன் மீது உயிராய் இருக்கும்,
உயிர்ப்புடன் இருக்கும் "யுரேனியம்" ...
உரசிப் பார்க்காதே..
உலகே அழியலாம்!

- என்னுயிரே!

Monday, May 16, 2011

After life -3


This Song
is Dedicated To the only one whom i loves the ever-most in this world!

உன்னை சந்தித்தப் பின்தான்...
சந்தோசத்தின் விலாசம் அறிந்தேன்!
நீ எனை விடுத்துப் போனாய்
நான் சவமானேன்!

கொள்ளைக்காரி - என்மனதை!
திருடி - என்கனவுகளை!
ரவுடி - எனுடமைகளை!
என்று எனதெல்லாமையையும்
களவு கொள்வதால் நீ ஒரு 420!

காதல் சாதி மதம் ஒழிக்குமா
என்பது அறியேன்
ஒன்று மட்டும்
நிச்சயம்...
என்னைப் போன்ற அனாதைகளை,
நிச்சயம் ஒழிக்கும்...
எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு
குறைந்தபட்சம் சாகடிக்கும்!

உன்னை நேசிக்க
மட்டும் கற்றுக்கொடுத்துவிட்டு...
"தூர நில்" என்றாய்!
என் மீது பிண நாற்றம்
அடிக்கத் துவங்கியது!

எனக்கு அழுவதற்கு மட்டும்
கற்றுக் கொடுத்தப் பின்
நான் அழவேக் கூடாது என்று
உறுதிமொழியும் பிடுங்கிப்போனாள் !

என் உடல், பொருள், ஆவி
அனைத்தும் அவள்...
இப்பொழுது வெறும்
பிணம் மட்டும் மி[எ]ச்சமாய்
என்னிடத்தில்!

"என்னமோ ஏதோ" -
அவள் அழைப்புக்கென
நான் வைத்துகொண்ட
DialerTune - ம்,
அவள் அழைப்பை எதிர்ப்பார்த்து
ஏமாந்து....

ஒருவேளை இந்த கவிதைக்கும்
அவள் வந்து கருத்துப்
பதிவிடலாம்...
யார்கண்டார்?
என் சாவுக்கும்
வந்திருந்து மொய் வைத்துப்
போவாள் அவள்!

இப்பொழுதெல்லாம்
என் கவிதைகள்
காதலைச் சுட்டுவதைக்காட்டிலும்,
கல்லறையின் முகவரி
உள்ளடக்கியேப் பிறக்கின்றன...
காலாவதியானதால்!

நீயும் நானும் சந்திக்கும் வரை
வெட்டியாய் இருந்த காதல்,
எனை; நீ பிரிந்தப்பின்...
எனக்கு வெட்டியானாய்ப் போனது!

காதல் எனைத்
தூக்கிலிட்டு,
கழுத்தைவெட்டி,
நஞ்சூட்டிப் பின்
எரித்துப்
புதைத்தது!

-- கண்ணீருடன் வினு

Friday, May 6, 2011

After life -2

உலக யுத்தம்
எப்படி இருந்தது என்றறியேன்!
ஆனால்
நானும் காதலித்திருக்கிறேன்
என்பதே போதுமானது!

இதுவரையிலும் எனக்காக
கவிதை வடித்தேன்...
இனிமேல் அவளுக்காக....

அவள் அப்பா உத்தமம்...
ஒரே வார்த்தை - 'உன்னைப் பிடிக்கவில்லை'!
அவளுக்கு,
"பிடித்திருகிறதா / பிடிக்கவில்லையா" என்றே
தெரியவில்லையாம்!

இப்பொழுது மிச்சம் இருப்பது...
இந்த "வினு" மட்டுமே...
இனி அவளுக்காக மட்டும் இந்த குயில் பாடும்!

என்மேலான முடிவில்தான்
அவளுக்கு குழப்பம்...
இந்த "வினு" மீதல்ல!

ஊடலுக்குப் பின்னுமான...
எங்கள் முதல் உரையாடலே,
நான் மீண்டும் பதிவெழுதனுமாம்!

நல்லவேளை நான் ஏற்கனவே
செத்துப் போய்விட்டேன்...
நடைப்பிணங்கள்
மற்றவர்களின் கருத்துக்களுக்கு
கவலைப்படுவதில்லை!

செத்துப்போய் வாழ்வதிலும்
ஒரு வசதிதான்...
இனி சந்தோசமும்
துக்கமும்
எதுவும் செய்யப் போவதில்லை எனை!

அவளுக்கு எனைப்
பிடிக்கவில்லை எனும்போது
வாழவேணுமோ? - என்றெண்ணியது நிஜம்தான்!

ஆனால் அவளை
நினைத்துக் கொண்டிருப்பதே
சுகமாய் இருக்க,
அவளுக்காகத்தான் இனி இந்த
குயில் காலம் முழுதும்
பாடும் என்பதை தவிர,
வேறென்ன வரம் வேண்டும்
என் கவிக்-குரல் அவளுக்கு பிடித்திருக்கிறதே!

சாட்சிகள், சந்தர்ப்பங்கள்
எல்லாம் சரியாய் இருந்தாலும்...
குற்றவாளி கையில் தீர்ப்பைக்
கொடுப்பது காதலில் மட்டுமே சாத்தியம்!

அவளுக்கு என
கொடுக்க என்னிடத்தில்
மிச்சமிருப்பது ஒரே ஒரு
சாபம் மட்டுமே!

அடுத்தப் பிறவி என்று ஒன்றிருப்பின்...
நீ ஆணாய்ப் பிறந்து,
27 வருடம் அனாதையாய்த்திரிந்து...
நீ முதன் முதலில் காதலிக்கும்
பெண்ணையே கிடைக்கப் பெறனும்!

அப்பொழுது தெரியும்....
இந்த அதிர்ஷ்டக்கட்டையின்
அருமை!

வாழ்த்துக்கள்!

Sunday, May 1, 2011

After life

வலிகளால் வளர்க்கப்பட்டவன் நான்.
வசந்தத்தின் வாசம்..
என் வாழ்வில்
வராமல் போனதற்கும்
வந்தவுடன் போனதற்கும்...
காரணம் புரியாமல்...
வழிதவறிப்போன வாழ்கையை வாழ்பவன்!

வழிபோக்கனாய் வாழ்ந்து போவபன்!
வாய்கரிசி வரும் நாளுக்காய்...
வெறும் வாழ்க்கையை
மட்டும்
வைத்துக் கொண்டு
காத்திருப்பவன்!

வட்டமோ மாவட்டமோ!
யாரேனும் ஒரு ஆட்சியாளரிடம்...
இப்பொழுதே
முன்பணம் கொடுத்து வைக்கணும்!

நடுரோட்டில்
வண்டியில் அடிப்பட்டிறந்த
முகம் அறியா ஜீவனாய்
சாவதில் வருத்தமில்லை
காக்கையும், கழுகுகளும்
கொத்தித் தின்பதற்குள்...
கொஞ்சம் எடுத்துப் போடச் சொல்லவேண்டும்!

எரிப்பதானுலும்...
புதைப்பதானுலும்....
எதுவாகினும் சம்மதம்!
எம்மதமும் சார்ந்தவனில்லை...

எனக்குத் தெரிந்ததெல்லாம்...
காதல் எனும்
ஒரே ஒரு மதம் மட்டும்தான்!
நான் சேர ஆசைப் பட்டும்...
என்னை சேர்த்துக் கொள்ளாத
காரணத்தால்!

எப்பொழுதும் எளிதில் கிடைத்தவை யாவிலும்,
எவ்வளவோ முயன்றும்
கிடைக்காதவைகளை
எல்லை இல்லா அளவு விரும்புவது
வழக்கம்தான்!

இப்பொழுது என் காதலும் வழக்கிலில்லா
ஒன்றாகிப் போனது!

அதிலும் சப்பைக் கட்டுப்பாடுகளால்
ஒதுக்கிவைக்கப் பட்டவன்!
காக்கைக் குருவி எங்கள் ஜாதி
என்று சொன்ன பாரதியை
எழுப்பிச் சொல்ல வேண்டும்...

இப்பொழுது வந்து பார் காதலிலும் உண்டு ஜாதி என!

-வினு!